வைசியால் வீதி பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வரும் அவலம்- பொதுமக்கள் அவதி


கோவை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து வரும் வறட்சியின் காரணமாக அத்யாவசியத் தேவைக்குக்கூட நீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் நீரும் இரு வாரத்திற்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒரு முறை என்றே விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீரும் மக்களுக்கு போதுமானதாக இல்லை என குற்றச்சாட்டு நிலவி வருகிறது.



இந்நிலையில், தற்போது மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் நீரும் சாக்கடை நீர் கலந்து வருவதாக வைசியால் பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

இன்று வைசியால் வீதி வித்யாலயா பள்ளி அருகே குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், அந்த நீர் முழுவதும் சாக்கடை நீர் கலந்து கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், வைசியால் உள்ளிட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுபோன்றே சாக்கடை நீர் விநியோகிக்கப்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாக்திடம் புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...