கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் பங்கேற்றனர். பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுயசார்பு மற்றும் தலைமைப் பண்புகளை மேம்படுத்துவது குறித்து சிறப்புரைகள் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பின் (Women Empowerment Cell) தொடக்க விழா செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) காலை நடைபெற்றது. கல்லூரியின் IAS அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் M.R. எழிலி தலைமை வகித்தார். தனது உரையில், நவீன காலத்தில் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுயசார்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். கல்லூரிகளில் இதுபோன்ற அமைப்புகள் செயல்படுவது மாணவிகளின் தலைமைப் பண்பு மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் என்றும் குறிப்பிட்டார்.



தொடர்ந்து, கணினி அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை இணைப் பேராசிரியர் முனைவர் S. சித்ரா, பெண்கள் மேம்பாட்டு அமைப்பின் புதிய பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கான பதவியேற்பு நிகழ்வை நடத்தி வைத்தார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக கோவையைச் சேர்ந்த Point Perfect Technology Solutions நிறுவனத்தின் HR மேலாளர் G.S. கிஷோர் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தனது உரையில், கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் முறைகள் மற்றும் வேலைவாய்ப்புத் திறன்களை வளர்த்துக்கொள்வதன் அவசியம் குறித்து அவர் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து முனைவர் ஏ. மாலதி மேம், பெண்கள் அதிகாரம் மற்றும் விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார். பெண்கள் எதிர்கொள்ளும் சமூகச் சவால்கள், அவற்றை எதிர்கொள்ளும் மன உறுதி, பொருளாதார சுதந்திரத்தின் அவசியம் மற்றும் பாலின சமத்துவம் குறித்து அவர் பேசினார். மாணவிகள் சுயமரியாதையுடனும் இலட்சியக் கனவுகளுடனும் தங்களது எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின் நிறைவில், முதலாம் ஆண்டு கணினி அறிவியல் முதுகலை மாணவி பவி வர்ஷினி R நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் தொடக்க விழா நிறைவடைந்தது.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...