கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு 80, 83, 46 உள்ளிட்ட பகுதிகளில் கொசுப்புழு உற்பத்தியாகும் பொருட்கள் அகற்றப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோயம்புத்தூர் மாநகராட்சியானது கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலம் என ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகக்கூடிய பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், பெயிண்ட் டப்பா, தர்மாகோல், ஆட்டுக்கல், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பூந்தொட்டி, பிளாஸ்டிக் வாளி உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.



மேலும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று (27.08.2026) மத்திய மண்டலத்தில் சிறப்பு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வார்டு எண் 80-க்கு உட்பட்ட கெம்பட்டி காலனி, சாவித்திரி நகர் பகுதிகள், வார்டு எண் 83-க்கு உட்பட்ட BRS காவலர் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வார்டு எண் 46-க்கு உட்பட்ட இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இப்பகுதிகளில் கொசுப்புழு உற்பத்தியாகக்கூடிய தேவையற்ற பொருட்கள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன. மேலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

நீர் தேங்கும் பகுதிகளை அகற்றவும், தண்ணீர் தேக்கும் பாத்திரங்களை வாரம் ஒருமுறை சுத்தம் செய்யவும், டெங்கு கொசு இனப்பெருக்கத்தை தடுக்க தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran தலைமையில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் ஐந்து மண்டலங்களிலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொசு ஒழிப்பு பணிகளில் பங்கேற்கவும், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகவும் மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newsletter

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...