கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் S. சௌந்தரராஜன் சிறப்புரையாற்றினார். சுமார் 900 மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இணைய பாதுகாப்பு குறித்து விவரிக்கப்பட்டது.


Coimbatore: கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் சார்பில் Cyber Crime Awareness Programme எனும் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகஸ்ட் 27, 2026 அன்று காலை 10.00 மணியளவில் திருமந்திரம் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr S. ரவி மற்றும் பதிவாளர் B. V. பிரதீப் தலைமை தாங்கினர்.






இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக S. சௌந்தரராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP), தலைமையகம், கோவை மாவட்டம் கலந்துகொண்டு இணையக் குற்றங்கள், இணைய பாதுகாப்பு மற்றும் சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துதல் குறித்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். இணையவழி குற்றங்களின் தன்மை, அவற்றிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.




கவிதா, Inspector of Police, Cyber Crime, Coimbatore District மாணவர்களுக்கு இணையவழி மோசடிகள், தகவல் திருட்டு, சமூக வலைதள குற்றங்கள் உள்ளிட்ট பல்வேறு இணையக் குற்றங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை விரிவாக விவரித்தார். தனிப்பட்ட தகவல்களை பகிர்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்குரிய இணைப்புகளை கிளிக் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.






இந்நிகழ்ச்சியில் கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி K. M. G. ஆதி பாண்டியன், கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் சுமார் 900 மாணவ, மாணவிகள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடைந்தனர். இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...