குடிசை மாற்று வாரியம் சார்பில் வெள்ளலூர் ராஜவாய்க்கால் பகுதி மக்களுக்கு குலுக்கல் முறையில் வீடு

கோவை மாநகரத்தில், குளம் மற்றும் நீர்வழித்தட புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வாழ்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் மாநகரத்தில் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், கோவையில் உக்கடம், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, வெள்ளலூர் குறிச்சி மலை, கோவைபுதூர் அண்ணாநகர், மலைநகர் ஆகிய இடங்களில், எட்டாயிரத்துக்கும் அதிகமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. குறிச்சி குளம், வெள்ளலூர் ராஜவாய்க்கால், சங்கனூர் பள்ளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளலூர் ராஜவாய்க்கால் பகுதியை ஆக்கிரமித்து வசிக்கும் மக்களுக்கு மே 3 ஆம் தேதியன்று (நாளை) குலுக்கல் முறையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் ஒத்துக்கப்படுகின்றன.

அதன்படி, ஆக்கிரமிப்பாளர்கள் கணக்கெடுக்கப்பட்டு குடிசை மாற்று வாரியம் மூலமாக, வெள்ளலூரில் 2,186, மலுமிச்சம்பட்டியில் 1,460, மதுக்கரை அண்ணாநகர் 960, மலைநகரில் 224 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.

இதில் முதற்கட்டமாக வெள்ளலூர் ராஜவாய்க்கால் பகுதியை ஆக்கிரமித்து வசிக்கும் மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சி சார்பில் கணக்கெடுக்கப்பட்டு மொத்தம் 1,750 பேர் வசிப்பது உறுதி செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இவர்களுக்கு நாளை (மே 3) குலுக்கல் முறையில் வீடுகள் வழங்கப்படும். அடுத்தகட்டமாக மற்ற நீர்நிலைகள் மற்றும் குளங்களை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கும் வீடுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...