உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி புதிய வடிவில் உருவாக்கப்பட்ட குப்பை ஏற்றிச் செல்லும் வாகனம் அறிமுகம்

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட தாமு நகர் 65-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள 'சைப்ரஸ் ஓக்' அபார்ட்மெண்டில் குப்பை ஏற்றிச் செல்லும் பேட்டரி வாகனம் மற்றும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை ஏற்றி செல்லும் வாகனத்தை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.



இது குறித்து கோவை மாவட்ட திடக்கழிவு மேலாண்மை ஆலோசகர் சுரேஷ் பண்டாரி கூறுகையில்; கோவையில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தரம் பிரிக்கும் வகையில் கோவை மாநகராட்சி சார்பில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள பேட்டரி வாகனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த குப்பை ஏற்றும் வாகனம் வீடு வீடாக சென்று குப்பையை தரம்பிரித்து ஏற்றி செல்வதற்கு உதவும்.



அதுமட்டுமல்லாமல், புதிதாக பச்சை மற்றும் நீலம் நிறத்தில் மினி டோர் குப்பை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பச்சை நிறம் வாகனம் மக்கும் குப்பைக்காகவும், நீல நிற வாகனம் மக்காத குப்பைக்காவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பச்சை நிறம் வாகனத்தில் குப்பையை கொட்டுவதற்கு எளிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது குப்பை தொட்டி நிறைந்த பின்னர், அதனை இந்த வாகனத்தின் பின் புறத்தில் உள்ள லாக் உதவியுடன் பொருத்தப்பட்டு தானியங்கி மூலம் வாகனத்தில் குப்பை கொட்டப்படுகிறது. இந்த புதிய வடிவில் அமைக்கப்பட்ட குப்பை தொட்டியில் 120 லிட்டர் அளவில் கொள்ளளவு உடையதாகவும். நீலம் நிறத்தில் உள்ள வாகனம் சாதாரணமான முறையில் மக்காத குப்பைகளை கேரிபேக் மூலம் கட்டி எடுத்துச் செல்லப்படும். இந்த திட்டம் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்றார்.



Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...