ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் சார்பில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு குறித்து விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் இன்டர்னல் புகார் அமைப்பின் சார்பில் பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு குறித்து விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் கே.வி.சுரேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கவிதா ராஜகோபால் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "பெண்களின் முன்னேற்றத்தினைப் பொருத்தே சமூகத்தின் முன்னேற்றமும் அளவிடப்படுகின்றன" என்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் வாசகத்தை நினைவுகூர்த்து உரையாற்றினார். 

தொடர்ந்து, பணியிடத்தில் பெண்களின் மீதான பாலியல் வன்புணர்வு குறித்தும், அதில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு உரையாற்றினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இன்டர்னல் புகார் அமைப்பின் (ஐசிசி) ரேனு தாமஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். ஐசிசி உறுப்பினர் மரியா யேசுராஜா அனைவரையும் வரவேற்று பேசினார். நிறைவாக ஏ.விஜயசித்ரா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியினை ஐசிசி உறுப்பினர் பி.எஸ்.சாந்தினி ஒருங்கிணைத்து நடத்தினார். இதில், ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...