கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் கொடியேற்றத்துடன் மகா கும்பாபிஷேக விழா துவக்கம்

கோவை சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவிலில் 48-வது ஆண்டு திருவிழாவினை முன்னிட்டு சனிக்கிழமையன்று (நேற்று) இரவு 7 மணியளவில் கொடியேற்றத்துடன் விழா துவங்கப்பட்டது. இந்த வழிபாட்டு நிகர்ச்சில் கோவில் தந்திரி சிவபிரசாத்நம்பூதிரி தலைமை வகித்தார். இந்து சமய இணை ஆணையாளர் ஆ.இளம்பரிதி முன்னிலை வகித்தார். 



இதனைத்தொடர்ந்து, நாளை (ஜூன் 26) 2-ம் நாள் திருவிழாவையொட்டி காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் ஐயப்ப சேவா சங்கத்தின் 62-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.



தொடர்ந்து, ஜூலை 1ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் பட்டிமன்றம், யானைகளுடன் ரதம், செண்டை வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.



திருவிழா நாட்களில் தினமும் காலையில் யானை வாத்தியத்துடன் சிறப்புப் பூஜைகளும் நடைபெறவுள்ளது.



கோவையில் பிரசிதிபெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலின் இச்சிறப்பு வழிபாட்டினைக் காண கோவை மட்டுமின்றி திருப்பூர், சேலம் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்ட மக்களும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...