காவல்துறையினர் பொய்வழக்கு புனைவதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் தற்கொலை முயற்சி- பரபரப்பு


கோவை மாவட்டம், காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிஜிலு. இவரது மனைவி இந்து. இவர்கள் அதேப் பகுதியில் வீடு கட்டுவதற்காக தனியாரிடம் கடன் பெற்றுள்ளனர். இதில், முழுமையாக கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், பிஜிலு-விற்கு கடனுதவி அளித்தவர் குண்டர்கள் மூலம் கடந்த மாதம் பிஜிலுவின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பிஜிலு மற்றும் அவரது மனைவி இந்து சரவணம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நிலையில் காவல்துறையினர் இந்த தமிபதியினர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து, ஜாமீனில் வெளியே வந்த இந்த தம்பதியினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து, பிஜிலு, இந்து தம்பதியினர் கூறுகையில், நாங்கள் வீடுகட்ட கடன் அளித்த நபர் தற்போது குண்டர்கள் உதவியுடன் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இதுகுறித்து சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாலர் ராஜ்குமாரிடம் புகார் அளித்த நிலையில் அவர் எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டார். மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

முன்னதாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...