பள்ளி நிர்வாகம் நன்கொடை கேட்பதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி தர்ணா

கோவை மாவட்டம், அன்னூர் வட்டத்தினைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் சத்யபிரியா. இவர், அதேப் பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி வித்யாலயா பள்ளியில் தற்போது நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி 449 மதிப்பெண்கள் பெற்று அப்பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.



இந்நிலையில், 11-ம் வகுப்பிற்கு வேறு பள்ளியில் சேர்வதற்காக சக்தி வித்யாலயா பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் கோரியதற்கு ரூ.1 லட்சம் நன்கொடை தந்தால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் தரப்படும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, சத்யா பிரியா மற்றும் அவரது தந்தை இளங்கோவன் ஆகியோர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இதுகுறித்து, செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறுகையில், எனது மகள் சத்யபிரியா 5ம் வகுப்பு முதல் சக்தி வித்யாலயா பள்ளியில் பயின்று வருகிறார். தற்போது 10ம் வகுப்பில் 449 மதிப்பெண் பெற்று மேற்குறிப்பிட்ட பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 11ம் வகுப்பிற்கு வேறு பள்ளியில் சேர்க்க மாற்றுச்சான்றிதழ் கேட்டதற்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை தர வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறுகிறது. இந்தளவிற்கு பெரிய தொகைக்கு நான் என்ன செய்வேன். 

கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...