வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் முறைகேடுகள்: 6 ஆயிரம் என்.ஜி.ஓ-க்களின் உரிமம் ரத்து செய்யப்படுமா?

வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெரும் வகையில் இந்தியாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளன.

நன்கொடை பெறுவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதை அறிந்த மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து தன்னார்வ அமைப்புகள் நிதி உதவி பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டது. மேலும், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக வரவு- செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் இருப்பதை உள்துறை அமைச்சகம் கண்டறிந்தது. இதையடுத்து கடந்த 2011-2015  ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்குகளை கடந்த மே மாத இறுதிக்குள் சமர்பிக்குமாறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

ஆனால், இது வரை 5 ஆயிரத்து 922 தன்னார்வ அமைப்புகள் தங்கள் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து, எப்ஆர்சிஏ (Foreign Contribution Regulation Act) விதியின் படி ‘உங்கள் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?’ என்ற கேள்வியையும் உள்துறை அமைச்சகம் எழுப்பியுள்ளது.

இதற்கு வரும் 23ம் தேதிக்குள் பதில் அளிக்காத தன்னார்வ அமைப்புகளின் வெளிநாட்டு நன்கொடை பெறும் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...