கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ அடுத்துள்ள காமராஜர் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மில் அருகே இருந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் வெட்டினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மீதமுள்ள மரங்கள் வெட்டப்படுவது நிறுத்தப்பட்டது.



இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

தனியார் மில் அருகே சாலை ஓரத்தில் இருந்த மரங்களால் எந்த ஒரு பாதிப்பும் இல்லாத நிலையில் இந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் எதற்கு வெட்ட வேண்டும். தனியார் மில்லின் காம்பவுண்ட் அருகில் ஏ.டி.எம் இயந்திரம் அமைக்க பணி மேற்கொண்டபோது மரத்தின் வேர் பாதிக்கப்பட்டு மரம் சாய்ந்துவிட்டதாக மரம் வெட்டியவர்கள் கூறுகின்றனர். இது குறித்து மில் நிர்வாகத்திடம் கேட்டபோது மரத்தை அகற்ற தாங்கள் சொல்லவில்லை என தெரிவிக்கின்றனர். இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 



இதனைத் தொடர்ந்து மரங்களை வெட்ட வந்தவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து 5 மரங்கள் வெட்டப்பட்டிருந்த நிலையில் மீதமுள்ள 3 மரங்களை வெட்டாமல் வெட்டபட்ட கிளைகளை மட்டும் நெடுஞ்சாலைத் துறையினர் அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பரபரப்பு நிலவியது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...