இணைந்த ஒருதாய் குழந்தைகள் - நீக்கப்பட்ட சின்னம்மா !

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக சசிகலாவின் கையில் வசமடைந்தது. அதில் வெறுப்படைந்த அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிந்தார். தொடர்ந்து, சசிகலாவின் தலைமையில் அணிதிரன்ட பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் எடப்பாடி.பழனிசாமியை முதலமைச்சர் பதவிக்கு முன்மொழிந்து வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, இரு அணிகளாக செயல்பட்டு வந்த அதிமுக அணிகள் மீண்டும் இணைக்கப்படும் என பலதரப்பினரால் கூறப்பட்டு வந்த நிலையிலும் இரு அணிகளுக்கு இடையிலும் கருத்து மோதல்களே தொடர்ந்து நிலவி வந்தது.

இந்நிலையில், பல்வேறு போராட்டங்களுக்குப் பின் நேற்று (ஆகஸ்ட் 22) அதிமுக-வின் இரு அணிகளும் ஒருமனதாக இணைந்தன. 

தொடர்ந்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர், நிதித்துறை பதவி ஓ.பன்னீர் செல்வத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, அணிகள் இணைப்பிற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சின்னம்மாவாகிய சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் முன்மொழியப்பட்டது. நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பின் தினகரன் மற்றும் சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...