முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற நீதிபதிகள் அறிவுரை

முஸ்லீம் மதத்தினர்களிடையே, மூன்று முறை "தலாக்" சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால், குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாவதாகவும், இந்த நடைமுறைக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் 5 முஸ்லிம் பெண்கள் உள்பட 7 பேர் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மனுக்களை கடந்த மார்ச் 30ம் தேதியன்று தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு விசாரித்தது. கடந்த மே 18-ம் தேதி விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதிகள் நரிமன், உதய் லலித் மற்றும் குரியன் ஆகியோர் முத்தலாக் முறைக்கு எதிராக தீர்ப்பினை தெரிவித்தனர். முத்தலாக் முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறினர். 

நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் ஆகியோர் முத்தலாக்கிற்கு ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்தனர். கெஹர் கூறுகையில் அரசியலமைப்பு சட்டப்பிரிவுகளை முத்தலாக் மீறவில்லை என்று கூறினார். தொடர்ந்து, இஸ்லாமியருக்கு பிரச்சனை இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

இதனைத்தொடர்ந்து, மத்திய அரசு 6 மாதத்திற்குள் அவரச சட்ட திருத்தம் கொண்டு வந்து முத்தலாக் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அப்படி 6 மாதத்திற்கு சட்டம் இயற்றவில்லை என்றால் முத்தலாக் மீதான தடை நீடிக்கும். அரசியல் கட்சிகள் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை விட்டு மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதுகுறித்து நீதிபதிகளுள் ஒருவரான குரியன் கூறுகையில், ஷரியத் சட்டத்தை மீறும் வகையில் புனித குரானின் கொள்கைகளுக்கு முத்தலாக் எதிரானது. இஸ்லாமிய நடைமுறையுடன் முத்தலாக் ஒருங்கிணைந்த ஒன்று என்ற தலைமை நீதிபதியின் கருத்தை ஒப்புக் கொள்வது கடினம் என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...