17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பினர் வேலை நிறுத்தம்

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வங்கப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியினை கைவிட வேண்டும். வங்கிகள் இணைப்பு முயற்சியை கைவிட வேண்டும். கார்ப்பரேட்டுகளிடம் இருந்து வராக்கடன்களை வசூல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். 

இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி முன்பாக அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டம் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட வங்கிகளில் 95 சதவிகித வங்கி பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 2000 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் 20,000 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏறபட்டு இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் தொடர்போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் வங்கி ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...