கோவையில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு சிறப்பான முறையில் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் முகாம்

கோவை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு சிறப்பான முறையில் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் முகாம் நடத்த அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆசியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

ஐ.டி.ஐ, பொறியியல் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்காக இனிவரும் காலங்களில் நடத்தப்படவிருக்கும் நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளவும் தயார்படுத்திக் கொள்ளவும், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு சிறப்பான முறையில் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் முகாம் வழங்க அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதன் மூலம், படிக்கும் காலங்களில் தொழிற் கல்வியினை சிறப்பான முறையில் கற்றுத் தேர்ச்சி அடையவும். வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதலாகவும் இம்முகாம் உதவிகரமாக இருக்கும். கல்லூரிப் படிப்பினை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதற்கான வழிகாட்டுதலும், ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கான பயிற்சியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கென பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைகளில் தங்கள் பணி வாய்ப்பையம் திறனையும் மேம்படுத்த, திறன் மேம்பாட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்.

மேலும், மேற்கூரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் முகாம் மற்றும் திறன் மேம்பாட்டு. பயிற்சிகளில் கலந்து கொள்ள தங்களது விருப்பத்தினை எழுத்துப்பூர்வமாக மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...