ஏ.பி.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 41வது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா கொண்டாட்டம்



கோவை, பீளமேடு பகுதியில் உள்ள ஏ.பி.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 41வது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா இன்று காலை முதல் மாலை வரை அப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பீளமேடு காவல் நிலையத்தின் காவல் ஆணையர் செல்வராஜ்  கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.  பள்ளியின் தாளாளர் சந்திரகாந்தி பள்ளியின் கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டியை தொடக்கி வைத்தார். பின்னர், மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்று விளையாட்டிப் போட்டிற்கான தீப ஒளி ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மதியம் 2 மணி அளவில் அப்பள்ளியில் வளாகத்தில் பள்ளியின் ஆண்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு கோயமுத்தூர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் ஆய்வாளர் ஆர்.கீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, பெற்றோர்கள் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் மட்டும் கூறாமல், கூடுதல் செயல்திட்ட நடவடிக்கைகளை போதிக்க வேண்டும் என்றார். அப்போதுதான் மாணவர்கள் எதிர்காலத்தில் கல்வித்துறை மட்டுமல்லாமல் விளையாட்டுத்துறை போன்ற பல்வேறு செயல்பாடுகளில் முன்னேற்றம் அடைவார்கள் அதன் மூலம் வாழ்வில் முழு வெற்றி பெறுவார்கள் என்றார்.



பின்னர், மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, காலை முதல் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 100மீட்டர் தொடர் ஓட்டப்பந்தையம், 100 மீட்டர் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென ஓட்டப்பந்தயம், கைப்பந்துப் போட்டி, எறிபந்துப் போட்டி போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் சந்திரகாந்தி கோப்பைகள் வழங்கினார்.



நிகழ்ச்சியின் இறுதியில், பள்ளி மாணவர்களின் நடனம், பாடல்கள் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அனைவரின் கண்களை கவர்ந்தது. முன்னதாக, அப்பள்ளியின் முதல்வர் ராம்தாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார்.  விழாவில், கல்லூரி செயலாளர் விஜயகுமார், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...