நாடு முழுவதும் கலைகட்டிய விநாயகர் சதுர்த்தி- கோவில்களில் சிறப்பு பூஜை

தேசிய அளவில் கொண்டாடப்படும் இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி இன்று சிறப்பான முறையில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கோவையில் விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு கோவில்களில் சிறப்புப் பூஜைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலை நிறுவப்பட்டு வழிபாடும் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, கோவையில் விநாயகருக்கு என பிரசிதிபெற்ற ஈச்சனாரி மற்றும் புளியகுளம் விநாயகர் கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி சிறப்பு தரிசனத்தை கண்டு வழிபட்டு வருகின்றனர். 



மேலும், விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவாக கருதப்படும் அரிசி மாவு மூலம் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளும், எருக்கம் பூவினாலான மாலையும் அணிவித்து கொண்டாடி வருகின்றனர்.



இதில் குறிப்பாக, வழக்கம்போல் இரசாயன பூச்சுக்களாலும், பிளாஸ்டிக் கலவையினாலும் செய்யப்பட்ட விநாயகர் சிலை அல்லாமல் இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளே கோவை மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன.



மேலும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு எதிர்ப்பின் வெற்றியைக் குறிக்கும் வகையில் 'ஜல்லிக்கட்டு விநாயகர்' சிலை தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.



விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினரால் பெரும்பாலான பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வரும் ஆகஸ்ட் 27 அன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்க திட்டமிடப்பட்டுள்ளன.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...