முன்னாள் விஞ்ஞானி பெயர் சூடப்பட்ட "புதிய தவளை" இனம்


மேற்கு தொடர்ச்சி மலைகளின் கிழக்குச் சரிவில் புதிய ஊதா தவளை இனம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தவளைக்கு சலீம் அலி ஆர்னிதாலஜி ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய எஸ்.பூபதி என்னும் விஞ்ஞானியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

எஸ்.பூபதி, அகஸ்திய மலையில் இதுகுறித்தான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



தவளை மற்றும் ஆம்ஃபிபியன்ஸ் பிரிவு குறித்தான பத்திரிகையில் இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஊதா வகை தவளை இனத்தை கண்டறிந்தவர் ஜனனி என்றும், அதனை ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஒரு நீர்நிலையில் கண்டறிந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.



பூபதி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வகை தவளை அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் என்றும், மேலும், இந்த தவளை இனத்தின் தங்கையாக என்.சாஹயாட்ரென்சிஸ் வகை உள்ளதையும் கண்டறிந்துள்ளனர். இந்த இரு தவளை இனத்திற்கும் உள்ள வேறுபாட்டை உடலளவிலும், வடிவமைப்பினைக் கொண்டும் அடையாளம் காணப்படுகிறது. அறிதாக காணப்பட்டுள்ள இந்த தவளை இனத்தினை அதிகரிக்கும் வகையில் ஆராய்ச்சி நிலையத்தில் இனப்பெருக்கம் செய்யப்பட்டு ஈரப்பதம் நிறைந்த நீர்நிலை அருகில் விடப்பட்டுள்ளது.

மேலும், இந்த தவளை எந்தெந்த பகுதியில் உள்ளனவென்றும், எவ்வளவு எண்ணிக்கையில் இது உள்ளது என்றும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களிலேயே இது குறித்தான ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது.

என்.பூபதி என்னும் இந்த தவளை இனத்தை நீர்நிலைகள் நிறைந்த வனப்பகுதிகளிலேயே கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஏனெனில், இத்தவளை வனப்பகுதியினை விட்டு பொதுமக்கள், மலைத்தொடர்களில் உள்ள கோவில்களுக்குச் செல்லும் பக்தர்கள் பாதையில் குறிக்கிடும் போது இதற்கு இடர்பாடுகள் ஏற்படும் என கருதப்படுகிறது.



மேலும், பக்தர்கள், பொதுமக்கள் மூலம் சமீபகாலமாக நீர்நிலைகள் அசுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட நீர்நிலைகளின் அருகிலேயே இதனை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என இதுகுறித்து வெளியான பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...