ஈச்சனாரி கற்பகம் கல்லூரி அருகே தனியார் சொகுசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து



கோவை, ஈச்சனாரி கற்பகம் கல்லூரி அருகே தனியார் சொகுசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து. நீண்ட போராட்டத்திற்கு பிறகு பயணிகள் அனைவரையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

தென்காசியிலிருந்து கோவை வந்த தனியார் சொகுசு பேருந்து இன்று அதிகாலை, கோவை ஈச்சனாரி நெடுஞ்சாலை கற்பகம் கல்லூரி அருகே வரும் போது, கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து கோவை கருமத்தம்ப்பட்டி நோக்கி வந்த லாரி ஒன்று சொகுசு பேருந்தின் பின் புறத்தில் மோதியதாக தெரிகிறது. 

இந்த விபத்தில், சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மின் கம்பத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில், ஒரு சில பயணிகள் வெளியே வந்த நிலையில், பேருந்து ஓட்டுநர் மாரியப்பன் உட்பட குருவம்மா, பெரியசாமி, வத்சலா, சசிதரன், பாலகுரு, பொன்னுச்சாமி ஆகியோர் விபத்தில் சிக்கிக் கொண்டனர். 



இதை அடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொக்லின் இயந்திரத்தின் உதவியோடு பேருந்தை மீட்டு, உள்ளே இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். விபத்தில் பலத்த காயமடந்த ஓட்டுநர் மாரியப்பன், பெண் பயணி குருவம்மா மற்றும் லாரி ஓட்டுநர் அருகே உள்ளே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 



விபத்து குறித்து மதுக்கரை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி, குடியிருப்புகள் நிறைந்த இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பாலம் கட்டாததால் தான் அதிகளவு விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...