கோவை மாநகராட்சி சார்பில் இன்று "ஏடிஸ் கொசு ஒழிப்பு தினம்" கடைபிடிப்பு

தமிழக அரசின் உத்தரவின்படி, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் மற்றும் துணை ஆணையர் ப.காந்திமதி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி கோவை மாநகராட்சி சார்பாக பல்வேறு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு வியாழக் கிழமைகளிலும் “ஏடிஸ் கொசு ஒழிப்பு தினம்” கடைபிடித்து, அனைத்து அரசு மற்றும் தனியார் வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் பூங்காக்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி இன்று (12.10.2017) கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு அலுவலக வளாகங்கள், வட்டாட்சியர் அலுவலக (தெற்கு) வளாகங்கள், கிராம நிர்வாக அலுவலக வளாகங்கள் உட்பட மொத்தம் 14 அரசு அலுவலகங்கள், 3 நகர் நல மையங்கள், 64 பள்ளிகள் மற்றும் 8 தனியார் வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டு, கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வின் போது, அரசு மற்றும் தனியார் வளாகங்களில் தண்ணீர் தொட்டிகள், சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவை முறையாக மூடி வைக்கப்பட்டுள்ளதா எனவும், மழைநீர் தேங்கி உள்ளனவா எனவும், சமையல் அறையில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் முறையாக மூடி வைக்கப்பட்டுள்ளனவா எனவும், பள்ளி வளாகங்களில் தேவையற்ற பிளாஸ்டிக் கப்புகள், பேப்பர் கப்புகள் உள்ளனவா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.



தொடர்ந்து, உபயோகமற்ற பொருட்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள், பேப்பர் கப்புகள் மற்றும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், இன்று நடைபெற்ற கொசு ஒழிப்பு பணிகளின் போது குறிப்பாக வார்டு எண்.23 ஆர்.எஸ்.புரம் பாரதி வித்யா பவன் பள்ளி, வார்டு எண்.72 ஓய்.டபுள்யூ.சி.ஏ பள்ளி, வார்டு எண்.17 கல்வீராம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, பி.எஸ்.ஜி.சர்வஜனா பள்ளி மற்றும் செல்வபுரம் பாலவிகாஸ் ஆகிய பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு, டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



மேலும், கோவை மாநராட்சி சார்பாக ஒவ்வொரு வியாழக் கிழமைகளிலும் “ஏடிஸ் கொசு ஒழிப்பு தினம்” கடைபிடிக்கப்படும் எனவும், பொதுமக்கள் அனைவரும் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக்கொண்டு, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு  முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...