20 ஆண்டுகள் வீடில்லாமல் இருக்கும் சாட்டையடி மக்களுக்கு வீடு வழங்க வலியுறுத்தல்

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக வீடில்லாமல் சாலையில் தங்கியிருக்கும் சாட்டையடி மக்களுக்கு வீடு வழங்க வலியுறுத்தி சமூக நீதிக்கட்சிச் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 



இது தொடர்பாக சமூக நீதிக்கட்சியின் தலைவர் ந.பன்னீர்செல்வம் அளித்துள்ள மனுவில், துடியலூர் சந்தையில் திறந்த வெளியில் வீடில்லாமல் வசிக்கும் சாட்டையடி மக்களின் நிலை பரிதாபத்திற்குரியது. சாட்டையடி மக்களுக்கு கழிவறை உள்ளிட்ட வசதிகளின்றி பெண்கள், குழந்தைகள் திறந்த வெளியில் வசிப்பதும், வளர்மகளிர் நிலையும் மிக மோசமாய் உள்ளது. 



கைகளை அறுத்து சாட்டையால் அடிப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். அவ்வாறு பிழைத்து வரும் சாட்டையடி மக்கள் சுமார் 20 ஆண்டுகளாக கோவை மாநகரில் இருந்து வருகின்றனர். அம்மக்கள் சுயமரியாதையோடு வாழ மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சியரின் தன்விருப்புரிமை நிதியில் இருந்து வீடு வழங்கியும், மாற்றுத் தொழில் செய்ய கடனுதவியும் உடனடியாக வழங்கிட வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...