கோவையில் வாலிபர் வெட்டிக்கொலை: போலீஸ் விசாரணை

கோவை அருகே வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேதுராமன் (22). ரியல் எஸ்டேட் புரோக்கரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளத்தூர் தட்டான் தோட்டம் என்ற பகுதியில் வாடகைக்கு குடியேறியுள்ளார். 

அவருடன் அவரது நண்பரும் நல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவருமான கரிகாலன் (31) என்பவரும் தங்கியிருந்தார். 

இந்த நிலையில், சேதுராமன் வீட்டில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் சுகுமார், சேதுராமனை பார்க்கச்சென்ற போது அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இது தொடர்பாக சுகுமார், சூலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, சேதுராமன் தங்கி இருந்த அறையில் கஞ்சா பொட்டலங்கள் கண்டறியப்பட்டது. மேலும், அவர் கொலை செய்யப்பட்ட போது ஒரு பெண் அறையில் இருந்து தப்பியோடியதாகவும் தெரிகிறது. 

எனவே பெண் தகராறில் சேதுராமன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் சேதுராமனுடன் உடனிருந்த கரிகாலனை தேடி வருகின்றனர். 

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...