பணம் பெற்றுக்கொண்டு திரும்பத் தராமல் மிரட்டுவோர் மீது நடவடிக்கை கோரி மனு

பணம் பெற்றுக்கொண்டு திரும்பத் தராமல் மிரட்டுவதாகக் கூறி பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை என்பவரது மனைவி மணிபிரியா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த திலகவதி என்பவருக்கு இடம் விற்ற பணம் 4 லட்சம் ரூபாயை கைமாறாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் திரும்பக் கேட்ட போது திலகவதி மற்றும் அவரது மகன் ஆகியோர் பணத்தை திரும்ப கொடுக்க மறுத்ததாகவும், குண்டர்கள் சிலரை வைத்து கூடுதலாக 2 லட்சம் ரூபாய் கொடுக்குமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இழந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் மற்றும் மிரட்டல் விடுபவர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் தனது குழந்தைகள் மூவருடன் வந்து மனு அளித்தார்.

கந்து வட்டி விவகாரத்தில் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்து இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தற்போது கோவை ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...