குடிநீர் இணைப்பிற்கான கூடுதல் வைப்புத்தொகை செலுத்த நவ.,30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

கோவை மாநகராட்சியில் குடிநீர் இணைப்பிற்கான கூடுதல் வைப்புத்தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் நவம்பர் 30-ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக துணை விதிகளின் படி 01.10.2013 முதல் அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

கோவை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன் இருந்த 72 வார்டுகளில் 01.10.2013க்கு முன்னர் வீட்டு உபயோக குடிநீர் இணைப்பு பெற்ற இணைப்புதாரர்கள் கூடுதல் வைப்புத்தொகையாக ரூ.4000, வீட்டு உபயோகமல்லாத முறை இணைப்புதாரர்கள் ரூ.7000, செலுத்தப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு அனைத்து குடிநீர் இணைப்புதாரர்களுக்கும் அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டு 15.09.2017-க்கு முன்னர் கூடுதல் வைப்புத்தொகை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 

மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் கூடுதல் வைப்புத் தொகையாக விளாங்குறிச்சி பகுதியில் (வார்டு எண் 32) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.4000, குடியிருப்பு அல்லாத மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு ரூ.9000, காளப்பட்டி பகுதியில் (வார்டு எண் 33,34,35 மற்றும் 36) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.2000, குடியிருப்பு அல்லாத மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு ரூ.5000, வீரகேரளம் பகுதியில் (வார்டு எண் 18 மற்றும் 19) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.2000, குடியிருப்பு அல்லாத இணைப்புகளுக்கு ரூ.5000 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

துடியலூர் பகுதியில் (வார்டு எண் 1,2,3 மற்றும் 4) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.2000, குடியிருப்பு அல்லாத மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு ரூ.5000, சின்னவேடம்பட்டி பகுதியில் (வார்டு எண் 27 மற்றும் 42) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.2000, குடியிருப்பு அல்லாத மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு ரூ.5000, சரவணம்பட்டி பகுதியில் (வார்டு எண் 28,29,30 மற்றும் 31) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.2000, குடியிருப்பு அல்லாத மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு ரூ.5000 மற்றும் வெள்ளக்கிணறு பகுதியில் (வார்டு எண் 26 மற்றும் 43) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.2000, குடியிருப்பு அல்லாத மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு ரூ.5000 வீதம் மாநகராட்சிக்கு செலுத்தக்கோரி அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. 

மேற்படி குடிநீர் இணைப்பிற்கான கூடுதல் வைப்புத்தொகை செலுத்த நவம்பர் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலும் மற்றும் சனிக்கிழமைகளிலும் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களிலும் இத்தொகையினை செலுத்தலாம். மாநகராட்சி அனைத்து வரிவசூல் மையங்களிலும் எந்த மண்டலத்தைச் சேர்ந்த இணைப்புதாரரும் இத்தொகையினை செலுத்த இயலும். 

மேலும், 01.10.2013-க்கு முன்னர் குடிநீர் இணைப்பு பெற்று அறிவிப்பு கிடைக்கப்பெறாத இணைப்புதாரர்கள் சம்பந்தப்பட்ட வரிவசூல் மையங்களுக்கு குடிநீர் கணக்கெடுப்பு புத்தகத்தை கொண்டு சென்று குடிநீர் இணைப்பு எண்ணின் அடிப்படையில் இத்தொகையினை செலுத்திக்கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குடிநீர் இணைப்பிற்கான கூடுதல் வைப்புத்தொகையினை மாநகராட்சிக்கு தவறாமல் செலுத்தி ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...