விவசாயிகளுக்கு ஆதரவாக இருசக்கர வாகனத்தில் சென்று இளைஞர்கள் பிரச்சாரம்

சென்னையை சேர்ந்த இளைஞர்கள் 12 மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விவசாயிகளுக்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

கடும் வறட்சி, விவசாயக் கடன் போன்றவைகளால் நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் நாள்தோறும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக, விவசாயம் அழிந்து, உணவிற்காக அடுத்த மாநிலத்தையோ, நாட்டையோ சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுமோ என்று தற்போதைய இளைஞர்களிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், சென்னையில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் குர்ஷித் ஹுசேன், சுரேஷ், புருஷோத், ஆண்ட்ரு, இம்ரான், ஓஸ்வல் ஹுசேன் மற்றும் ராஜா ஆகிய 7 இளைஞர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக 12 மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று, விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும், அவர்களுக்கு ஆதரவு திரட்டவும் முடிவு செய்தனர். 



அதன்படி, கடந்த 22-ம் தேதி சென்னையில் தங்களது பயணத்தை தொடங்கிய அவர்கள், வரும் நவம்பர் 2-ம் தேதி நிறைவு செய்கின்றனர். இதுவரை 900 கி.மீ. பயணம் செய்துள்ள இளைஞர்கள், ஊட்டியில் இருந்து இன்று (அக்.,26) மேட்டுப்பாளையம் வந்தனர். அவர்களை, ஊட்டி செல்லும் பேருந்துநிறுத்தம் அருகே கோவை இளைய தலைமுறை மற்றும் கோவை பைக்கர்ஸ் கிளப்பினர் வரவேற்றனர். 



இது தொடர்பாக இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ள இம்ரான் கூறுகையில், விவசாயிகளுக்கு ஆதரவான இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான அனைத்து செலவுகளும் எங்களுடையதே,. விவசாயிகளிடம் பேரம் பேசுவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். இதுபோன்று செய்வதால், ஏழை விவசாயி, மேலும் ஏழ்மை நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும், கல்விப் பாடத்திட்டங்களில், விவசாயம் பற்றி கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் என இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் வலியுறுத்தினர். 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...