விவசாயிகளுக்கு ஆதரவாக இருசக்கர வாகனத்தில் சென்று இளைஞர்கள் பிரச்சாரம்

சென்னையை சேர்ந்த இளைஞர்கள் 12 மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விவசாயிகளுக்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

கடும் வறட்சி, விவசாயக் கடன் போன்றவைகளால் நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் நாள்தோறும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக, விவசாயம் அழிந்து, உணவிற்காக அடுத்த மாநிலத்தையோ, நாட்டையோ சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுமோ என்று தற்போதைய இளைஞர்களிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், சென்னையில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் குர்ஷித் ஹுசேன், சுரேஷ், புருஷோத், ஆண்ட்ரு, இம்ரான், ஓஸ்வல் ஹுசேன் மற்றும் ராஜா ஆகிய 7 இளைஞர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக 12 மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று, விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும், அவர்களுக்கு ஆதரவு திரட்டவும் முடிவு செய்தனர். 



அதன்படி, கடந்த 22-ம் தேதி சென்னையில் தங்களது பயணத்தை தொடங்கிய அவர்கள், வரும் நவம்பர் 2-ம் தேதி நிறைவு செய்கின்றனர். இதுவரை 900 கி.மீ. பயணம் செய்துள்ள இளைஞர்கள், ஊட்டியில் இருந்து இன்று (அக்.,26) மேட்டுப்பாளையம் வந்தனர். அவர்களை, ஊட்டி செல்லும் பேருந்துநிறுத்தம் அருகே கோவை இளைய தலைமுறை மற்றும் கோவை பைக்கர்ஸ் கிளப்பினர் வரவேற்றனர். 



இது தொடர்பாக இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ள இம்ரான் கூறுகையில், விவசாயிகளுக்கு ஆதரவான இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான அனைத்து செலவுகளும் எங்களுடையதே,. விவசாயிகளிடம் பேரம் பேசுவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். இதுபோன்று செய்வதால், ஏழை விவசாயி, மேலும் ஏழ்மை நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும், கல்விப் பாடத்திட்டங்களில், விவசாயம் பற்றி கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் என இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் வலியுறுத்தினர். 

Newsletter

உலக இரத்த தான தினம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் இரத்த தானம்

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சனிக்கிழமை இரத்த தான முகாம் நடைபெ...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி, சேலத்தில் கைது..!

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த மோசடி வழக்குக் கைதி பிம்முடு அஜித்குமார்,...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...