கோவையில் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட முயன்ற திமுக-வினர் கைது



கோவையில் நடைபெற்று வரும் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திமுக-வினர் 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை, சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் கடந்த திமுக ஆட்சியின் போது ரயில்வே மேம்பாலம் அமைக்க பணிகள் துவங்கப்பட்டது. ஆனால், அடுத்து ஆட்சியில் அமர்ந்த அதிமுக அரசு மேம்பாலப்பணிகளை கைவிட்டதாக அப்பகுதி மக்களால் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.



இந்நிலையில் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி மேம்பாலம் உள்ளிட்ட கோவையில் கட்டப்பட்டுவரும் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி திமுக சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக, செஞ்சிலுவை சங்கம் அருகே ஒன்று கூடிய 500-க்கும் மேற்பட்ட திமுக-வினர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டனர். ஆனால், அவர்களை செஞ்சிலுவை சங்கம் அருகிலேயே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.



அப்போது, எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் கிடப்பில் போடப்பட்டுள்ள பாலப்பணிகளால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இதே போன்று காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்படும் பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என திமுக-வினர் வலியுறுத்தினர்.

இதனைத்தொடந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...