ஆக்கிரமிக்கும் போஸ்டர்கள்


லாலிரோடு சந்திப்பில் கோவை காவல் துறையால் அமைக்கப்பட்டுள்ள வாட்ஸ் ஆப் சேவை எண் விழிப்புணர்வு பேனரை தனியார் விளம்பர போஸ்ட்டர்கள் ஆக்கிரமித்துள்ளன.



பொதுமக்களின் குறைகளை விரைவாகவும் எளிதாகவும் பெறுவதற்கு வசதியாக, 2016ஆம் வருடம் கோவை காவல் துறையால் தொடங்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பொதுமக்கள் தங்களின் குறைகளையும் புகார்களையும், புகைப்படங்களாகவும் காட்சிகளாகவும் பதிவு செய்து காவல்துறைக்கு நேரடியாக அனுப்பி வருகின்றனர். காவல்துறையினரும் உடனடியாக இந்த புகார்களை ஆராய்ந்து தக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். 

இந்த சேவையை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நகரின் முக்கிய சந்திப்புகளில் வாட்ஸ் ஆப் சேவை எண் அடங்கிய பேனர்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. சந்திப்புகளில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், சாலையை கடக்கும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் காவல்துறையினரின் வாட்ஸ் ஆப் சேவை எண்ணை குறித்துக்கொண்டு தங்கள் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில், காவல்துறையின் வாட்ஸ் ஆப் சேவை பற்றிய பேனர்கள் தொடர்ந்து தனியார் போஸ்டர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மறைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, காவல்துறையை தொடர்புகொள்வதற்கான 24 மணி நேர சேவை எண்ணையே மறைத்தவாறு விளம்பர போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டுவதால் பொதுமக்களிடம் இந்த சேவையைக் கொண்டு செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...