அடுத்த ஆண்டு முதல் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வு - அனைத்து ஆட்டோ தொழிற்சங்கக் கூட்டத்தில் முடிவு


கோவை, அக்டோபர் 28: வரும் ஜனவரி மாதம் முதல் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.



கோவையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, எல்.பி.எப், ஏ.டி.பி  உள்ளிட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தின் போது, வரும் ஜனவரி முதல் கோவையில் ஆட்டோ மீட்டர் கட்டணமாக 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.30-ம், அடுத்த ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.15 வீதம்  கட்டணம் வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, இது தொடர்பான கட்டண பட்டியலையும் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வெளியிட்டனர். 



இந்த புதிய கட்டணத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அரசு அனுமதி அளிக்காவிட்டாலும் ஜனவரி முதல் இந்த புதிய கட்டணத்தின்படி ஆட்டோ கட்டணம் வசூல் செய்வது என முடிவு செய்து இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். தனியார் நிறுவனங்களின் வரவால் ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், டிசம்பர் 17-ம் தேதி அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் மீண்டும் கூட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...