கோவையில் அதிகரித்து வரும் ”செல்ஃப் டிரைவிங் கார்” கலாச்சாரம் - வாடகை கார் ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக புகார்



கோவை, அக்டோபர் 30 : ”செல்ஃப் டிரைவிங் கார்”  முறை அதிகரித்து வருவதால், வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திரு.டி.என்.ஹரிஹரனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறியுள்ளதாவது, கோவை மாவட்டத்தில் தற்போது இயங்கி வரும் கர்நாடக மாநிலத்தின் ”செல்ஃப் டிரைவிங் கார்” பயன்பாடு அதிகரித்துள்ளது . இதனால், வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நடப்பாண்டில் நாடாளுமன்றம்  மோட்டார் வாகனச் சட்டம் 2017 என்ற சட்டத்தை  அமல்படுத்த உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ஏற்படும் விளைவுகள் என்னவென்றால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஓட்டுநர் பயிற்சி பள்ளி, வாடகைக்கு வாகனம் ஓட்டும் அலுவலகம், இவை அனைத்தும் ஒரே அலுவலகம் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் தொழில் செய்ய வேண்டும் என்ற முறையில் அந்த சட்டத்தை வடிவமைத்து உள்ளார்கள். இதன்மூலம் மோட்டார் தொழில் பாதிப்பு அடையும் அவலம் உருவாகியுள்ளது. 

அதாவது, எஃப்.சி.(FC) வேலைகள் மற்றும் வாகன வேலைகள் அனைத்தும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பார்க்க முடியும் என்பதால், பல வாகனங்களை இயக்க முடியாமல் போகும் சூழ்நிலை உருவாக உள்ளது. 

மேலும், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் என்ற முறை பொதுமக்களிடையே இருக்காது. ஒவ்வொரு முறையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இடம் புதிதாக பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். வேக கட்டுப்பாட்டு கருவையை சுற்றுலா வாகனங்களுக்கு பொருத்துவதை நீக்க வேண்டும். 8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மட்டும் பேட்ச் உரிமம் முறையை ரத்து செய்ய வேண்டும். வாகன காப்பீட்டுத் தொகையை குறைக்க வேண்டும்.

அண்டை மாநிலங்களை போல அனைத்து வாகனங்களுக்கும் டி-போர்டு அனுமதி கொடுக்க வேண்டும். கனரக வாகனங்களுக்கு கொடுக்கும் அனைத்து மாநிலங்களுக்கு சென்ற வர உரிமத்தை போல, சுற்றுலா வாகனங்களுக்கும் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...