"ஜிஎஸ்டி வரியால் உள்நாட்டு வணிகம் பாதிப்பு"- டி.வெள்ளையன்

கோவை, அக்டோபர் 31: சரக்குகள் மற்றும் சேவைகள் வரி உயர்வு (ஜிஎஸ்டி) செயல்படுத்தப்பட்டதால், பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு டி.வெள்ளையன் குற்றம் சாட்டினார் .

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் மருந்தக திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-



"இந்தியாவில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியினால் வியாபார மற்றும் வர்த்தகர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த வரியினால் தனியார் பெரு நிறுவனத்தினர் மட்டுமே பயனடைந்து வருகின்றனர். மதிப்புக் கூட்டு வரியினை விட ஜிஎஸ்டி வரி அதிகரித்துள்ளது. 

சில வெளிநாட்டு அரசாங்கங்கள், தங்கள் நலன்களுக்காகவும், இலாபங்களுக்காகவும் ஜிஎஸ்டி வரி விதிப்பினை செயல்படுத்துவதில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளன. ஒரு நாடு, ஒரே வரி என்பது முற்றிலும் பயனற்றது. இந்த வரிவிதிப்பானது இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு நல்ல இலாபத்தை வழங்குகிறது. அடிமட்ட உள்ளூர் வியாபாரிகள் நஷ்டத்தில் ஆழ்ந்துள்ளனர். 

உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பதால் மட்டுமே இந்திய பொருளாதாரம் முன்னேற்றமடையும். சந்தையில் இந்திய தயாரிப்புகளை மட்டுமே வாங்க மக்கள் முன்வர வேண்டும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் மாநில துணை பொதுச் செயலாளர் ஒய்.எம்.ஹபிபுல்லா பங்கேற்றார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...