தேவர் ஜெயந்தி விழாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற கோவை உதவி ஆய்வாளர் பலி

கோவை, அக்டோபர் 31: முத்து பழனியப்பன் (54), தேவர் ஜெயந்தி விழாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற கோவை உதவி ஆய்வாளர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று மரணமடைந்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளின் போது ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடத்தப்படுகிறது. அதன்படி, அவரின் பிறந்தநாளான நேற்று தமிழக அரசு சார்பில் குருபூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முதலைமச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து போலீசார் பாதுகாப்புக்கு சென்றிருந்தனர். 

கோவை மாவட்டத்தில் இருந்து ஆயுதப்படையில் சிறப்பு துணை ஆய்வாளராக பணியாற்றி வந்த முத்து பழனியப்பன் என்பவரும் பாதுகாப்புக்கு சென்றிருந்தார். . இந்த நிலையில், நேற்று பாதுகாப்பு பணியை முடித்த அவர் பரமக்குடியை அடுத்த முல்லைப்பள்ளி என்ற இடத்தில் ஓய்வெடுக்க சென்றார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் . தற்போது அவரது உடல் பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்

காவல்துறையில் பணியாற்றும் போதே முத்து பழனியப்பன் பலியானதால் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு காவல்துறையில் வேலை கிடைக்கும் என்பதும், அவரது இளைய மகன் அகில் சுஜின் கோவையில் மருத்துவப்படிப்பை மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...