டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி துணை ஆணையர் ஆய்வு

கோவை சிட்கோ தொழிற்சாலை வளாகம் மற்றும் கிழக்கு மண்டலம் நேரு நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் திரு.டி.என்.ஹரிஹரன் மற்றும் மாநகராட்சி துணை ஆணையர் திருமதி ப.காந்திமதி ஆகியோர் டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.



கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளும், பொதுமக்களுக்கு ஏடிஸ் கொசுப்புழு தொடர்பான விழிப்புணர்வு பணிகளும் உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



அதன்படி, இன்று மதுக்கரை ஊராட்சி ஒன்றியப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டபோது, ஈச்சனாரி சிட்கோ தொழில்நிறுவனங்கள் வளாகத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏடிஸ் கொசுப்புழு உள்ளதை கண்டு அப்புறப்படுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், சுகாதாரம் பேணிக்காக்காமல், ஏடிஸ் கொசுப்புழு வளரும் சூழலை கொண்டிருந்த நிறுவனத்திற்கு ரூ.5000 அபராதமும் விதித்தார்.

இதேப்போன்று, மாநகராட்சி துணை ஆணையர் கிழக்கு மண்டலம், 34-வது வார்டுக்குட்பட்ட நேரு நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் டெங்கு தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...