செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முழுமையாக இணைந்த மலைவாழ் கிராமங்கள்

கோவை, நவம்பர் 1 : கோவை மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைந்தனர். 

பாரத பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட செல்வமகள் சேமிப்புதிட்டம் 10 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு மட்டுமே உரிய திட்டமாகும். அதிக வட்டிவிகிதம் கொண்ட இந்தத் திட்டம் மக்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றது. மலைவாழ் மக்களிடம் அஞ்சல்துறையின் நலதிட்டங்கள் சென்றடையும் வகையில்,  பாலமலை பகுதியில் அமைந்துள்ள மாங்குலி பசுமணி, பசுமணிப்புதூர், பெரும்பதி, பெருக்குபதி, குஞ்சூர்பதி, ராயரூத்துபதி ஆகிய மலைவாழ் கிராமத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு செல்வமகள்  சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டது.

இதற்காக, கடந்த மாதம் 10-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்குப் புத்தகங்களை வழங்கினார். விழாவில் பிறந்து 9 மாதங்களே ஆன குழந்தைகளுக்குக் கூட கணக்கு தொடங்கப்பட்டது சிறப்பு அம்சமாகும்.

தொடர்ந்து, விழாவில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி பேசுகையில், அஞ்சல்துறையின் மகத்தான சேவைகள் இன்னும் தொடர வேண்டும். அதற்கு முழு ஒத்துமழைப்பு அளிக்கப்படும். இவ்வாறு கூறினார். 

இறுதியில், மலைவாழ் மக்களுக்கு கணக்கு துவங்க உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...