சாலைகளில் குவியும் மணலால் கோவையில் வாகன ஓட்டிகள் அவதி


கோவை, நவம்பர் 1: கோவை - மேட்டுப்பாளையம் சாலையை இணைக்கும் என்.எச்.67 சாலையானது 36 கி.மீ தூரம் கொண்டது. மலைகளின் ராணி என்றழைக்கப்படும் உதகைக்கு செல்லும் ஒரே வழியான இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். நாள்தோறும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலையில் வந்து செல்கின்றன. 

மேலும், மேட்டுப்பாளையம் மற்றும் மற்ற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தங்களது பணிக்காக, இருசக்கரம் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் கோவை நகரின் மத்தியப் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு வருபவர்கள் சாலைகளில் தேங்கிக் கிடக்கும் மணல்களினால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகளில் வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருக்கும் போது, காற்று வேகமாக வீசுவதால், அவர்களது  கண்களில் மணல் துகள்கள் விழுந்து, விபத்துகளும் ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றன. 

இதேபோல,  அவினாசி சாலையில் (என்.எச்.67) வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளும் இதே இன்னல்களை எதிர்கொள்கின்றனர். 

இது தொடர்பாக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் கார்த்திக் என்பவர் கூறுகையில், நான் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும் போதும், மணல் துகள்கள் தன் முகம் மீது விழுகிறது. காரணம், சாலையின் ஓரங்களில் மணல்கள் குவிந்து கிடப்பதே ஆகும். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக சாலையில் கிடக்கும் மணல்துகள்களை துப்புறவுப் பணியாளர்கள் அப்புறப்படுத்துவதை பார்த்துள்ளேன். ஆனால், தற்போது, அந்தப் பணிகளை காணமுடிவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

இதனிடையே, மேட்டுப்பாளையம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப்பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால், விரிவாக்கப் பணிகளால் சாலைகளில் உருவாகும், மணல் திட்டுக்களால் கடும் அவதிக்குள்ளாவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர். 

இது தொடர்பாக தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த பொதுமருத்துவர் மதிவாணன் பேசுகையில், நமது, நவீன வாழ்க்கையில் வாழ்ந்து வருபவர்களுக்கு தூசுகளால் அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சாலைகளில் கிடக்கும் மணல்களினால், நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள், முகத்தில் முகமூடி அணிந்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...