அதிக கட்டணத்தை வசூலிக்கும் கல்லூரிக்கு எதிர்ப்பு - பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் கைது

கோவை, நவம்பர் 2 : கோவையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழை வழங்க முடியும் எனக் கூறிய கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். 

கிணத்துக்கடவு இம்மிடிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் அசோக். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவர் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்து முடித்தார். இந்த நிலையில், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகமாக ரூ.70 ஆயிரத்தைச் செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் வழங்க முடியும் என அந்தக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகத்திடமும், ஆதி திராவிடர் நலத்துறையிலும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர் தரப்பில் கூறப்படுகின்றது. 



இந்த நிலையில், மாணவர் அசோக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கோரிக்கை அட்டை அணிந்து கையில் தட்டுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் தொடர்ந்து படிக்க முடியவில்லை என்றும், இதனால் பிச்சை எடுத்து கட்டணத்தை செலுத்தப் போவதாகவும் தெரிவித்த மாணவர் அசோக், படிக்கும் போது கூடுதல் கட்டணத்தை கேட்காமல் தற்போது படித்து முடித்த பின் சான்றிதழ் வழங்க வேண்டிக் கோரிய நேரத்தில் முழு கட்டணத்தையும் கல்லூரி நிர்வாகம் கேட்பதாக குற்றம்சாட்டினார். 

மேலும், இது தொடர்பாக, அரசு அதிகாரிகள் பேசினாலும் கல்லூரி நிர்வாகம் மாற்றுச் சான்றிதழை கொடுக்க மறுப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அசோக்கை காவல் துறையினர் கைது செய்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...