”சர்வதேச உயிர்அறிவியல் மற்றும் தாவரவியல் மாநாடு இன்று தொடக்கம்”


கோவை, டிசம்பர் 14

பாரதியார் பல்கலைக்கழகத்தில் 3 நாட்கள் நடைபெறும் ”சர்வதேச உயிர் அறிவியல் மற்றும் தாவரவியல்” மாநாட்டைத் துணைவேந்தர் ஆ.கணபதி தொடங்கி வைத்தார். 

பல்கலைக் கழகத்தின் உயிர்வேதியல், உயிர் தொழில்நுட்பவியல், நுண்ணுயிரி தொழில்நுட்பவியல் மற்றும் உயிர் தகவியல் ஆகிய 4 அறிவியல் துறைகள் இணைந்து பிரம்மாண்டமான ”சர்வதேச உயிர் அறிவியல் மற்றும் தாவரவியல் மாநாடு” தொடங்கப்பட்டது. விழாவினைத் தொடங்கி வைத்த துணைவேந்தர் ஆ.கணபதி பேசுகையில், அறிவியல் துறைகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கொணர்ந்து அனைத்து ஆராய்ச்சியாளர்களின் கலந்துரையாடலுக்கு வழிவகுத்த இம்மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களுக்குப் பாராட்டுகள். அடுத்த தலைமுறை ஆய்விற்கான பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்த வந்தி அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களை இணைக்கும் பாலமாக இந்த மாநாடு அமையும். என்றார். 

இதைத்தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி. தியாகராஜன் பேசுகையில், பல்துறை ஆராய்ச்சி தற்போதைய அறிவியல் வளர்ச்சிக்கும், மனித நோய்களை முறியடிக்கும் வழிகளுக்கும் தேவையான வழிமுறையாகும். எனக் கூறினார். 



இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து விஞ்ஞானிகள், அவர்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்து, அங்கிருந்த ஆய்வாளர்களோடு கலந்துரையாடுகின்றனர். தொடர்ந்து, அடுத்து வரும் இரண்டு நாட்களும் இந்த அறிவியல் ஆய்வு மாநாட்டில் சுமார் 169 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இம்மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...