அடிப்படை வசதிகளை செய்து தர சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் கோரிக்கை

கோவை, டிசம்பர் 19

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் உயர்நிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி கோரிக்கை விடுக்கப்பட்டது.



மாநில அரசின் சார்பாக சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்காக நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறும்.



அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இரா. செந்தில்வேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின் அனைத்து ஜமாஅத் பிரதிநிதிகள், பள்ளி நிர்வாகிகள், மகளிர் அமைப்புகள் உட்பட கிறித்துவ சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என 300-க்கம் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.



இதனைத்தொடர்ந்து சிறுபான்மையினருக்கான வழிபாட்டு உரிமைகளை பாதுகாத்திடவும், புதிய பள்ளிவாசல்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் கட்டிட அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், கரும்புக்கடை போன்ற முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அரசு உயர்நிலைப்பள்ளி, நூலகம், ஆரம்ப சுகாதார நிலையம், தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கியின் கிளை, பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...