2ஜி தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு: சட்ட ஆலோசனையை கேட்டு ஆயத்தமாகும் சி.பி.ஐ.


டிசம்பர் 21

2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. அதேசமயம், சட்ட ஆலோசனையை கேட்டு முடிவை அறிவிக்க உள்ளதாக சி.பி.ஐ. கூறியுள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஊழல் வழக்கில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட 14 பேரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 தனியார் நிறுவனங்களும் விடுவிக்கப்பட்டன. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதால் திமுகவினர் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.

இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பண பரிவர்த்தனை செய்தது தொடர்பான வழக்கில் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்ய உள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகின்றனர். தீர்ப்பின் நகல் கிடைத்ததும் அதனை ஆய்வு செய்து, சட்ட வல்லுநர்களின் கருத்தைக் கேட்டு மேல்முறையீடு செய்வதா? வேண்டாமா? என்பதை அறிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...