ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையம் முன் இருதய நிபுணர் தினேஷ் ஆஜர்

டிசம்பர் 22

ஜெயலலிதாவுக்கு இறுதியாக அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து இருதய சிகிச்சை மருத்துவர் தினேஷ் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு நியமித்தது. இந்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, அவர் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய சிகிச்சை மருத்துவர் தினேஷ் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

ஜெயலலிதாவுக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி இதய செயலிழப்பு ஏற்பட்டது. அப்போது, மருத்துவர் தினேஷ் சிகிச்சை அளித்தார். அதன் அடிப்படையில் அவர் இன்று ஆஜராகி நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். ஜெயலலிதாவுக்கு இறுதியாக அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? நீங்கள் சிகிச்சை அளித்தபோது அவருக்கு உயிர் இருந்ததா? உடல்நிலை தேறி வந்தவர் திடீரென பின்னடைவு ஏற்படக்காரணம் என்ன? என்பது பற்றி மருத்துவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...