மருத்துவ செலவை ஏற்க மறுத்தத் தனியார் பேருந்து உரிமையாளரைக் கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்


கோவை, டிசம்பர் 23

கோவை அருகே மருத்துவ செலவை ஏற்க மறுத்தத் தனியார் பேருந்து உரிமையாளரைக் கண்டித்து பாதிக்கப்பட்ட பயணிகளின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கள்ளப்பாளையத்தில் இருந்து உக்கடம் நோக்கி தனியார் பேருந்து (எண் 37) காலை 6.30 மணிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, கேரளாவில் இருந்து எல்என்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக அவினாசி சாலையை சென்றடைவதற்காக லாரி ஒன்று வந்தது. அதிகாலை நேரம் என்பதால், சாலை விதிகளை மீறி ஓடிய அந்தப் பேருந்து, லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்து ஓட்டுநரின் கால்கள் துண்டாகின. மேலும், பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் பலத்த காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.



உடனடியாக அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து, தனியார் பேருந்தின் உரிமையாளர் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு குவிந்திருந்த படுகாயமடைந்த பயணிகளின் உறவினர்கள், அவரை முற்றுகையிட்டு, மருத்துவ சிகிச்சைக்கான செலவை ஏற்றுக் கொள்ளுமாறு முறையிட்டனர். ஆனால், அதனைப் பேருந்து உரிமையாளர் ஏற்க மறுத்தால், இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.



இதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த படுகாயமடைந்த பயணிகளின் உறவினர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், சிந்தாமணிபுதூர் பிரிவில் இருந்து சூலூர் வரையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த சூலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உரிய நிவாரணம் பெற்றுத் தருவதாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Newsletter

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...