இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்ட 63 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

கோவை, டிசம்பர் 23

கோவையில் உள்ள பாப்பிஸ் ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள 63 அடி கிறிஸ்துமஸ் மரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. மேலும் இந்தியாவிலே மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம் என்ற பெயரை தட்டிச்சென்றதுடன், யுனிவர்சல் அச்சீவர்ஸ் என்ற சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.



கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி உள்ளதையொட்டி, கிறிஸ்துவர்கள் இல்லங்கள், விடுதிகள், வணிக நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம், மற்றும் சான்டாகிளஸ் போன்ற பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக, கோவை சாய்பாபா கோவில் அருகே உள்ள பாப்பிஸ் ஹோட்டல், டிரீம் ஃப்ளவர் ஈவென்ட்சுடன் இணைந்து மிக உயரமான கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். சுமார் ஒரு வார காலத்தில் 1.2 டன் எடையுடைய 63 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை 30 பேர் கொண்ட குழு உருவாக்கி உள்ளனர். மின் விளக்குகள் நட்சத்திரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தொடர்புடைய பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த மரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தியாவிலே மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம் என்ற பெயரை தட்டிச்சென்றதுடன், யுனிவர்சல் அச்சீவர்ஸ் என்ற சாதனை புத்தகத்திலும் இந்த மரம் இடம் பெற்றுள்ளது.



இது தொடர்பாக, பாப்பிஸ் ஹோட்டல் குழுமம் செயற்பாட்டு மேலாளர் ஜெயராமன் கூறுகையில், திட்டமிடல் முதல் வரைதல் மற்றும் மரத்தை உருவாக்குதல் வரை எங்கள் அணி படிப்படியாக வேலை செய்தது. கோவையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும், கின்னஸ் உலக சாதனைப் பதிவில் எங்களது பெயரை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு இந்த முயற்சி செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.



இதற்கு முன்னர், மும்பையின் வர்லி நகரில் உள்ள ஒரு தனியார் சமுதாயம் 56 அடியிலும், 2014-ம் ஆண்டில் ஷாப்பர் ஸ்டாப் லிமிடெட் 40 அடி உயரத்திலும் கிறிஸ்துமஸ் மரங்களை உருவாக்கியிருந்தன. தற்போது, இந்தச் சாதனைகளை பாப்பிஸ் ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள 63 அடி உயரமான கிறிஸ்துமஸ் மரம் உடைத்துள்ளது. இந்தியாவின் மிக உயரமான இந்த கிறிஸ்துமஸ் மரம் இன்று முதல் ஜனவரி 2, 2018 வரை பாப்பிஸ் ஹோட்டலில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...