மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி

கோவை, டிசம்பர் 24

தமிழக எல்லைப்பகுதியான மளுக்கப்பாறை எஸ்டேட்டில் அழுகிய நிலையில் சிறுத்தைப்புலியின் உடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது உடல்நலக் குறைவால் இறந்திருக்கலாம் என வனத்துறை கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தமிழக- கேரள எல்லைப்பகுதியான மளுக்கப்பாறை எஸ்டேட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெள்ளைச்சாமி என்பவரது மகன் திலீப்குமார் (12) சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது தொழிலாளர்கள் குடியிருப்புக்குள்  கோழியை பிடிப்பதற்காக வந்த சிறுத்தைப்புலி கோழியைப் பிடித்து விட்டு ஓடிய போது திலீப்குமார் மீது மோதியதில் அந்த சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்து அவனது நெற்றியில் காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், வனத்துறையினர் கூண்டு வைக்கவில்லை. இருப்பினும், அப்பகுதியில் உலா வந்த சிறுத்தையை பிடிக்க ஆங்காங்கே கேமரா வைத்து கண்காணித்தனர். ஆனால் சிறுத்தைப்புலி கேமராவில் பிடிபடவில்லை.



இந்நிலையில் இன்று மளுக்கப்பாறை எஸ்டேட் டிவிசன் எடமலை ரேஞ்சுக்கு உட்பட்ட 10-வது லைன் பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் துர்நாற்றம் வந்த பகுதியில் சென்று பார்த்த போது புதருக்குள் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த எடமலை ரேஞ்ச் வனத்துறை அதிகாரி ஜெயகுமார் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் சிறுத்தையின் உடலை கைப்பற்றினர். பின்னர் வனத்துறை கால்நடை மருத்துவர் டோமி இறந்த சிறுத்தையை உடற்கூறு ஆய்வு செய்தார். இது உயிரிழந்து மூன்று நாட்கள் இருக்கும் எனவும், உடல்நலக்குறைவால் அச்சிறுத்தை இறந்துள்ளது எனவும் வனத்துறை கால்நடை மருத்துவர் டோமி தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...