ஆர்.கே. நகரில் வெற்றிவாகை சூடினார் தினகரன் !


டிசம்பர் 24

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அவரது சொந்த தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக, தினகரன் அணி ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

இதனைத்தொடர்ந்து, பல்வேறு பரபரப்புக்கு இடையே வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் இன்று (டிசம்பர் 24) நடைபெற்றது. இதில் ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கிய டி.டி.வி. தினகரன் 89,013 வாக்குகள் பெற்று 40.707 வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியினை பெற்றார். இதற்கு அடுத்தபடியாக மதுசூதனன் (அதிமுக) 48,306 வாக்குகளும், மருதுகணேஷ் (திமுக) 24,651 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், திமுக, பாஜக உள்ளிட்ட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பாஜக 1417 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் அதனை விட நோட்டா அதிக வாக்கினை அதாவது 2323 வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...