27வது மாநில அளவிலான ஸ்கேடிங் போட்டிகள் கோவையில் தொடக்கம்

கோவை, டிசம்பர் 25

தேசிய ஸ்கேடிங் சாம்பியன்ஷிப்பிற்கான தகுதி போட்டிகள் வ.உ.சி மைதானத்தில் இன்று முதல் வியாழக்கிழமை (28.12.2017) வரை நடைபெறுகிறது.



தமிழ்நாடு ரோலர் ஸ்கேடிங் அசோசியேஷன் சார்பாக நடத்தப்படும், 27வது மாநில அளவிலான தகுதி போட்டியில், தமிழகத்தின் 32 மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 1200 ஸ்கேடிங் வீரர்கள் பங்கேற்கின்றனர்.



வயது அடிப்படையில் ஏழு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட, ஆண் மற்றும் பெண் ஸ்கேட்டிங் வீரர்கள், கால்களில் சக்கரத்தைக் கட்டிகொண்டு மைதானத்தில் சிறுத்தையாக சீரிப்பாய்ந்தனர்.



இதுகுறித்து பேசிய தமிழ்நாடு ரோலர் ஸ்கேடிங் அசோசியேஷனின் உறுப்பினர், S.P ராமநாதன் கூறியதாவது, 'சென்னைக்கு அடுத்து கோவை மக்கள் ஸ்கேடிங் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சுமார் 18 வருடங்களுக்கு பிறகு, கோவையில் தேசிய ஸ்கேடிங் போட்டிகளுக்கான தகுதி போட்டிகள் நடைபெறுவதால், பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஸ்கேடிங் விளையாட்டிற்கான வசிதகள் கொண்ட பிரத்யேக மைதானம் தற்போது நகரில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்து வரும் போட்டிகளில் கோவையைச் சேர்ந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து பல சாதனைகளை படைப்பார்கள்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...