தமிழகத்தில் எந்த நேரத்திலும் மாற்றம் ஏற்படும்- தினகரன் ஆதரவாளர் புகழேந்தி

கோவை, டிசம்பர் 26

தமிழகத்தில் எந்த நேரத்திலும் மாற்றம் ஏற்படும் என்றும், அந்த மாற்றத்திற்காகத்தான் காத்திருப்பதாகவும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.



கோவை, குனியமுத்தூரில் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 

தமிழகத்தில் எந்த நேரமும் பெரிய மாறுதல் ஏற்படும். அந்த மாற்றத்திற்காகக் காத்திருக்கின்றோம். தேர்தல் வெற்றியை ஏற்றுக்கொள்கின்றோம் என திருமாவளவன் சொல்லி இருக்கின்றார். தேர்தல் வெற்றியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் தமிழக அமைச்சர்கள் பேசுகின்றனர். 

போயஸ் கார்டன், கருணாநிதி இல்லம் என அனைவரின் வீட்டையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், நாம் யாரும் பார்த்திராத ஜெயக்குமாரின் வீடு மிகப்பெரிய மன்னர் மாளிகை போன்று இருக்கும். ஒரு தெருவில் ஆரம்பித்து மற்றொரு தெருவில் முடியும். இதை எப்படி அவர் சம்பாதித்தார். 

ஓரே ஒரு இடைத்தேர்தலில் ஜெயித்ததற்கு பைத்தியம் பிடித்தவர்களை போல அதிமுக அமைச்சர்கள் புலம்புகின்றனர். முதலமைச்சராக தினகரனை பார்க்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கீழ்த்தரமாகப் பேசுகின்றார். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோரை மாலுமிகளாக கொண்ட கப்பல் மூழ்கி விட்டது. அதில் இருந்து ஓ.எஸ். மணியன் வெளியே வர வேண்டும்.

அமைச்சர் ஜெயக்குமார் அவரது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மதுசூதனனை எங்களிடம் அனுப்பட்டும். அதே தொகுதியில் எங்களால் மதுசூதனனை ஜெயிக்க வைக்க முடியும். அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அரசியல் அனாதை.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...