சசிகுமார் கொலை வழக்கு : முபாரக்கை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு

கோவை, டிசம்பர் 26

சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முபாரக்கை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் மனு தொடுத்துள்ளனர்.



இந்து முன்னணியின் கோவை மாநகர மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்த சசிகுமார் (35) கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதியன்று மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து துடியலூர் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தினால் வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த சதாம் (27), அபுதாகிர் (27) மற்றும் ஜி.எம். நகரைச் சேர்ந்த சுபைர் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில், அபுதாகிர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட முபாரக் (28) தலைமறைவாக இருந்த நிலையில், பொள்ளாச்சி வடக்கிபாளையத்தில் அவரைக் கைது செய்தனர். பின்னர், இன்று சிறப்பு நீதிமன்றத்தில் முபாரக் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி குணசேகரன், அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனிடையே, முபாரக்கை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் மனு அளித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...