மத்திய அமைச்சர் கீழ்த்தரமாக பேசுவது வேதனை அளிக்கிறது - நடிகர் பிரகாஷ்ராஜ்

டிசம்பர் 26

மதச்சார்பற்றவர்களின் ரத்தம் மற்றும் பிறப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டேவிற்கு, நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலம் கெப்பல் மாவட்டத்தில் நடைபெற்ற பிராமணர் இளைஞர் சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டே பேசுகையில், ஒரு இஸ்லாமியர் தன்னை இஸ்லாமியர் என்றும், கிறிஸ்துவர் தன்னை கிறிஸ்துவர் என்றும், பிராமணர் தன்னை ஒரு பிராமணர் என்றும் பெருமையாக கூறிக் கொண்டால் எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் அவர்களின் ரத்தம் என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். 

ஆனால், மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. அவர்கள் என்ன ரத்தம் என்று தெரியாமல், அடையாளங்கள் இல்லாமல் இருக்கின்றனர். இவ்வாறு கூறினார். 

அமைச்சரின் இந்தக் கருத்திற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சர் இவ்வளவு கீழ்த்தரமாக பேசுவது வேதனையளிக்கிறது. ரத்தம் மனிதனின் ஜாதி, மதத்தை நிர்ணயிக்காது. மதச்சார்பின்னமை, எந்த மதத்தையும் சார்ந்து இல்லை என்று அர்த்தமில்லை. எல்லா மதத்தையும் மதித்து ஏற்றுக்கொள்ளுதல். இவ்வாறு குறிப்பிட்டார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...