மருத்துவ ஊழியர்களை அச்சுறுத்தும் மர்ம நபர்களை அடையாளம் காண அரசு மருத்துவமனையில் 74 கண்காணிப்பு காமிராக்கள்


கோவை, டிசம்பர் 26

மருத்துவ ஊழியர்களை அச்சுறுத்தும் மர்ம நபர்களை அடையாளம் காண அரசு மருத்துவமனையில் 74 கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர். B அசோகன் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனைக்கு நாள் தோறும் 8 ஆயிரம் வெளி நோயாளிகளும் 1500க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் வந்து செல்கின்றனர். 

நோயின் தீவிரத்தன்மை காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் போது அவர்களின் உறவினர்கள் மருத்துவ பணியாளர்கள் மீது கோபம் கொண்டு அவர்களை தாக்க முற்படுகின்றனர். 

மேலும், சில மர்ம நபர்கள் இரவு நேரங்களில் மருத்துவமனை வார்டுகளுக்குள் புகுந்து அங்கு உள்ள மருத்துவ பணியாளர்களை மிரட்டி வருகின்றனர். 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னை அரசியல் கட்சி ஒன்றின் பிரமுகர் என்று கூறிக் கொண்டு மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்த நபர் ஒருவர் இருப்பிட மருத்துவ அதிகாரியையும், மருத்துவமனை ஊழியர்களையும் தாக்க முற்பட்டார். 

இது தொடர்பாக, மருத்துவமனை தரப்பு அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் அந்த நபரை எச்சரித்து அனுப்பினர். 

இவ்வாறு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் எழுவதால் , மருத்துவமனை ஊழியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக சிம்ப்ளி-சிட்டி செய்திகளை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், மருத்துவ பணியாளர்களை அச்சுறுத்தும் நபர்களை அடையாளம் காண கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக அம்மருத்துவமனையின் முதல்வர்தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 74 கண்காணிப்பு காமிராக்கள்  பொருத்தப்பட்டுள்ளன. மருத்துவமனை வளாகத்திற்கு வந்து செல்பவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதற்காக அவை பொருத்தப்பட்டன. 

தற்போது நிர்வாக பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் அறையிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிகாரிகளை மிரட்டும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது போலீசாரிடம் புகார் அளிக்க முடியும்" என்றார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...